0 0
Read Time:4 Minute, 19 Second

மயிலாடுதுறை, ஜூலை- 02:
மயிலாடுதுறை மாவட்டம், வள்ளாலகரம் ஊராட்சி பகுதியில் இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா மற்றும் மருத்துவர்கள் தின விழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.

இந்திய மருத்துவ கழக மயிலாடுதுறை தலைவர் மருத்துவர் பாரதிதாசன் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் மருத்துவர் இரத்தின அருண்குமார் புதிய கட்டிட மதிப்பீடு பகிர்வு உரையாற்றினார்.
இந்திய மருத்துவக் கழக கிழக்கு மண்டல துணைத் தலைவர் மருத்துவர் கோவிந்தராஜன் மற்றும் மூத்த மருத்துவர்கள் முன்னிலை வகித்தனர்.

ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்திய மருத்துவ கழக புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்நிஷா கட்டிட கல்வெட்டை திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மருத்துவர்களின் பணியை பாராட்டி சிறப்புரையாற்றினர். மாவட்ட ஆட்சியர் கூறும்போது“கொரோனா காலத்தில் மருத்துவர்களின் பங்கு வார்த்தைகளால் கூறிவிட முடியாது. மயிலாடுதுறை மாவட்ட மருத்துவர்கள் அனைவருமே மிகச் சிறந்த மருத்துவ சேவை புரிபவர்களாக இருப்பது மாவட்டத்திற்கே பெருமை. இந்த கட்டடம் அதற்கு சான்று” என பாராட்டி பேசினார்.

இதில், சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குனர் அஜித், ஏ.ஆர்.சி.குழுமத் தலைவர் விஸ்வநாதன், வணிகர் சங்க தலைவர் செல்வம், ஏ.டி.எஸ். குழும நிறுவனங்களின் தலைவர் தமிழ்ச்செல்வன், மருத்துவர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மருத்துவத்துறையில் சேவை ஆற்றி வரும் மூத்த மருத்துவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், ரோட்டரி, லயன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.

பேசிய மக்கள் மருத்துவர் பாரதிதாசன், “மருத்துவர்களான நம்மை கடவுளுக்கு நிகராக நம்புகிறார்கள். நம்மிடம் வரும் ஒவ்வொரு பேஷண்டையும் நமது உறவாக நினைத்துப் பேணிக் காத்திட வேண்டும். அவர்களை நோயாளியாக மட்டுமே பார்த்துவிட்டுக் கடந்து போகக்கூடாது. இந்த கட்டடம் சாதாரணமாக உருவாகிடவில்லை. பலரது நேரடி உழைப்பும், மறைமுக உழைப்பும் அதிகம். இந்த கட்டடம் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்” எனப் பேசினார்.

ஊடகவியலாளர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மயிலாடுதுறை கிளை செயலாளர் மருத்துவர் சௌமித்யாபானு நன்றியுரையாற்றினார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %