0 0
Read Time:1 Minute, 51 Second

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொண்டாமுத்தூர் கிளை நூலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா 03/07/2023 காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
விழாவிற்கு தொண்டாமுத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் கவிஞர் சுப்பு. தர்மன் அவர்கள் தலைமையற்றார். பொறுப்பு நூலகர் ஸ்டெல்லா மேரி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
திமுக வடக்கு மாவட்ட செயலாளர் திரு டி. ஏ. ரவி அவர்கள், பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் திருமதி கமலம் ரவி அவர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தனர்.
விழாவில் பேரூராட்சி மன்ற துணை பெருந்தலைவர் மு.ப. நடராஜ், முன்னாள் துணை தலைவர் டி.என்.சேகர், கவுன்சிலர் டி. எம். தியாகு, ரோட்டரி சங்க கோவை மாவட்ட துணை ஆளுநர் டி. குமார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் டாக்டர் மா.சிவக்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் எஸ். ஷைனி சிவகுமார், சாந்தி, பேரூராட்சி மேற்பார்வையாளர் அய்யாசாமி, தொண்டாமுத்தூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஜி. மாணிக்கம்மாள், எஸ்.ஆர்.மீராபாய் ஆசிரியர், வி.ராஜாமணி, பூவாத்தாள் உட்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு சிறப்பித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %