1 0
Read Time:2 Minute, 7 Second

சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் இருபத்தி ஏழாவது பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநர் PDG. Dr. ஆர்.பழனிவேல் கும்பகோணம் ரோட்டரி கிளப் லிருந்து வருகை தந்து சிறப்புரை நிகழ்த்தினார்.மண்டலம் 14னுடைய உ தவி ஆளுநர் முனைவர் சுனில் குமார் புதிய உறுப்பினர்களைஇணைத்து வைத்து, சர்வதேச ரோட்டரி நடைமுறைகளை விளக்கினார். இந்நிகழ்ச்சியில் கடந்த ரோட்டரி ஆண்டின் தலைவர் முனைவர் எஸ். பிரகதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார்,
கடந்த ஆண்டின் செயலாளர் முனைவர் கே.சின்னையன் 2022-23 ஆண்டின் ஆண்டு அறிக்கை வாசித்தார்.நிகழ்ச்சியில் ரொட்டேரியன் கோ. நிர்மலா, தலைவராகவும்,ல்.சி.ஆர். கே. நடராஜன் செயலாளராகவும்,சி.கே.ரமேஷ் ஆணந்த் பொருளாலராகவும் மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.

பொருளாளர் சி.கே. ரமேஷ் ஆனந்த் அவர்களிடம் கணக்கு புத்தகம் ஒப்படைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளை சிதம்பரத்தைச் சேர்ந்த சக ரோட்டரி சங்கத்தினர் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர், சிதம்பரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை உறுப்பினர்கள், சிதம்பரம் இன்னர் வீல் சங்கத்தினர்
கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் சுமார் 200 தேவை குடும்பங்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியில் செயலாளர் எல்.சி.ஆர். கே. நடராஜன் நன்றியுரை கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %