0 0
Read Time:1 Minute, 42 Second

17/07/2023 மதியம் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு. கிராந்தி குமார் பாடி IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி எல். சுமதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கே. சண்முகசுந்தரம் அவர்கள், தொண்டாமுத்தூர் பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் துணைத் தலைவர் திரு தொ. அ. ரவி அவர்களும் முன்னிலை வகித்தனர். மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சு. முத்துசாமி அவர்கள் விலையில்லா மிதிவண்டி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் அவர்களின் 12 ஆம் வகுப்பு பயிலும் அன்பு மகன் சி. வருண் அவர்களுக்கு பரிசுகள் வழங்கிய இனிய தருணம். உடன் தொண்டாமுத்தூர் பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் திருமதி கமலம் ரவி அவர்கள் ஆடிட்டர் மோகன்ராஜ் அவர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %