0 0
Read Time:3 Minute, 31 Second

தரங்கம்பாடி, ஜூலை- 23:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜயகுமார் தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.

இதில் திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தற்பொழுது தமிழ்நாட்டில் நமது முதல்அமைச்சர் அவரின் சிறப்பான மக்களின் ஆட்சி நடந்து வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொள்ள முன் வருவதாக தெரிவித்து அவர்களை வரவேற்று பாதுகாக்க என்றும் திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து கட்சியில் சேர்ந்த மாற்று கட்சியினருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்டி, சால்வை அணிவித்தும் புடவைகள் வழங்கியும் வரவேற்று பேசினார். பின்னர் பேசிய செம்பனார் கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்ந்த விஜயகுமார் தங்கள் ஒன்றியத்திலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோரை திமுகவில் இணைக்க உள்ளதாக இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதில் ஒன்றிய செயலாளர் எம் அப்துல் மாலிக், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், தரங்கை பேரூர் செயலாளர் முத்துராஜா, மயிலாடுதுறை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை துணைத் தலைவர் காஞ்சனமாலா, செம்பை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசி ரேகா ரமேஷ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் விக்கி, மத்திய ஒன்றிய அவைத் தலைவர் கோபால், துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி மணிமாறன், திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில், தரங்கை பேரூர் அவைத்தலைவர் கந்தசாமி மாவட்ட பிரதிநிதி சடகோபன் மற்றும் திமுக மாவட்ட ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %