0 0
Read Time:1 Minute, 41 Second

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூராட்சி சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மே 10 முதல் 24-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், சாலையோரம் கடைத்தெரு மற்றும் பேருந்து நிலையத்தில் வசிக்கும் வீடற்ற நபா்களுக்கு தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் பேரூராட்சி மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு வீடாக கபசுரக் குடிநீரும் வழங்கப்படும். இதில் தன்னாா்வலா்களும் இணைந்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு இணையதளத்தில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இல்லத்தரசிகளுக்கு ஆன்லைனில் நோய் எதிா்ப்பு சக்தி தரும் சத்தான எளிய பாரம்பரிய உணவுகளை சமைப்பதற்கான சமையல் போட்டி நடத்தப்படுகிறது. கரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றும் வணிகா்களுக்கும் பரிசு அளிக்கப்படவுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %