0 0
Read Time:2 Minute, 17 Second

செம்பனாகோயில், ஜூலை- 25:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செம்பனார்கோயில் பகுதியில் விவசாயிகள் பருத்தி அறுவடை செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு மூலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் இ-நாம் முறையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
இதில் தேசிய வேளாண் மின்னணு சந்தை மூலம் நாகப்பட்டிணம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் கண்காணிப்பாளர் சங்கர்ராஜா முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

பருத்தி ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7,278-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,845-க்கும் சராசரி விலையாக ரூ.6,755-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக சுமார் 3,000 குவிண்டால் பருத்தி ரூ.2.5 கோடிக்கு கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது. இந்த ஏலத்தில் 983 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை, தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பூர், கும்பகோணம் மற்றும் ஆந்திரா, குஜராத் ,மகாராஷ்ட்ராஉள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 18 வியாபாரிகள் மற்றும் மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %