0 0
Read Time:1 Minute, 36 Second

தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க சர்வாதிகாரியாக செயல்படுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ”போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு கடந்தாண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக கூறினார்.

போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் எனக்கூறிய அவர், தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் குறைந்து வருவதாக தெரிவித்தார்.

போதை பொருள் நடமாட்டம் குறைய அக்கறையுடனும், பொறுப்புடனும் செயல்படும் காவல்துறைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்ட அவர், மேலும் ஆர்வத்தோடு செயல்பட்டு போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %