0 0
Read Time:4 Minute, 1 Second

செம்பனார்கோயில், ஆகஸ்டு- 26:
மயிலாடுதுறை மாவட்டம, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் மாநிலம் முழுவதும் உள்ள 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு தொடக்கப் பள்ளியிலும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியினை, எல்.இ.டி. திரை மூலமாக திரையிடப்பட்டதை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், பார்வையிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது செம்பனார்கோயில், சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், மயிலாடுதுறை ஆகிய 5 ஒன்றியங்களுக்குட்பட்ட 386 தொடக்கப் பள்ளிகளிலும், மணல்மேடு, குத்தாலம், வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட 6 தொடக்கப் பள்ளிகளிலும் என மொத்தம் 392 தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 19 ஆயிரத்து 26 மாணவர்கள் பயன் பெறுவார்கள். மேலும், காலை உணவு திட்டத்தின் கீழ் திங்கட்கிழமைகளில் சேமியா உப்புமா, காய்கறி சாம்பாரும், செவ்வாய் கிழமைகளில் ரவா காய்கறி கிச்சடி, சாம்பார், புதன்கிழமைகளில் வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமைகளில் அரிசி உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிகிழமைகளில் கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ப.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் துளசிரேகா ரமேஷ், மாவட்ட கூட்டுறவு தலைவர் ஞானவேல், ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துலெட்சுமி ராஜசேகர், ஆறுபாதி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி கலியபெருமாள், ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜி.சுசிலா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, விஜயலெட்சுமி, வட்டாட்சியர் சரவணன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %