சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் SLEEP MODE-க்கு சென்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிரங்கியது. சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டரும், பிரக்யா ரோவரும் வெற்றிகரமாக பிரிந்து சென்று, தங்களது பணிகளை சிறப்பாக செய்து வந்தது.
நிலவில் இருந்து அனுப்பிய புகைப்படங்களை அவ்வப்போது இஸ்ரோ வெளியிட்டு வந்தது. இந்நிலையில், பிரக்யான் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் SLEEP MODE-க்கு சென்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி குறைந்ததால் விக்ரம் லேண்டர் SLEEP MODE-க்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) September 4, 2023
Vikram Lander is set into sleep mode around 08:00 Hrs. IST today.
Prior to that, in-situ experiments by ChaSTE, RAMBHA-LP and ILSA payloads are performed at the new location. The data collected is received at the Earth.
Payloads are now switched off.… pic.twitter.com/vwOWLcbm6P
விக்ரம் லேண்டரில் இருந்து அனைத்து தகவல்களும் பெறப்பட்டு விட்டதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.