0 0
Read Time:4 Minute, 10 Second

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன.

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன. குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். இதில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 48 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 42 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 24 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 21, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 20 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 63 மனுக்களும் என மொத்தம் 218 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வாணகிரி கிராமம் மீனவர் காலனியை சேர்ந்த மதுமதி என்பவர் எனது கணவர் வீரவேல் என்பவர் கடந்த ஆண்டு இந்திய கடற்படை துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்ததால், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதனால் வருமானம் இன்றி தவித்து வருகிறோம்.

மேலும் எனது குடும்ப வறுமை நிலையை போக்கிட நலத்திட்ட உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த சனிக்கிழமை வாணகிரி கிராமத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார்.அம்மனுவை பரிசீலித்த ஆட்சியர் மகாபாரதி கோரிக்கை மனுப்பெற்ற 2 தினங்களுக்குள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் குடும்ப வறுமை நிலையை போக்கிடும் வகையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாணகிரி கிராமத்தை சேர்ந்த மதுமதிக்கு சுயதொழில் தொடங்க ஏதுவாக கலெக்டர் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

தொடர்ந்து, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் எந்திரங்களை ஆட்சியர் மகாபாரதி வழங்கினார். கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேஷ், உதவி கலெக்டர் யுரேகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %