0 0
Read Time:1 Minute, 45 Second

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக்கோரி மாநில பாஜக சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ரவியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் தலைமையிலாக குழுவினர் நேரில் சந்தித்தனர்.

அபபோது அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் சனாதான எதிர்ப்பு
பேச்சுக்களை பேசுவதும் அதே மேடையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அமர்ந்திருப்பது அவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்கும் போது எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது என்பதால், இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரு. நாகராஜன் கூறியதாவது :

சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேசிய போது அங்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமர்ந்திருந்த அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் வரும் 11ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என கரு. நாகராஜன் கூறியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %