0 0
Read Time:5 Minute, 15 Second

பிக் பாஸ் 7-வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட எழுத்தாளர் பவா செல்லதுரை எதிர்பாராத வகையில், வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த 1-ம் தேதி தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதல் வாரமே அனல் பறந்தது. ஆட்ட விதிகளின்படி, நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.

இதில் அனன்யாவை வெளியேற்றும் முடிவை அறிவிக்கும் முன்னர் கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களிடமும் யார் வெளியே செல்வார் என்பதை அவர்களின் யூகத்தின் அடிப்படையில் கேட்டார். இதில் ஒருசிலரை தவிர, பெரும்பாலானோர் பவா செல்லதுரை பெயரை தான் சொன்னார்கள். மற்றபடி யாருமே அனன்யா பெயரை சொல்லவில்லை. சனிக்கிழமை நிகழ்ச்சியின் பெரும்பாலான பகுதியை ஜோவிகா – விசித்ராவின் படிப்பு தொடர்பான விவகாரமே ஆக்கிரமித்துக் கொண்டது. இறுதியில் மக்கள் தீர்ப்பே இறுதியானது எனக்கூறி அனன்யாவை கமல் வெளியேற்றினார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக பவா செல்லதுரை தற்போது திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸிடம் பேச வேண்டுமென்று இரண்டு மணி நேரம் கோரிக்கை வைத்த பவாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கன்ஃபெஷன் அறையில் பிக் பாஸிடம் பேசிய பவா, இப்போதுதான் இந்த விளையாட்டை புரிந்து கொண்டதாகவும், இனிமேல் ஒரு நாள் கூட தன்னால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறியதாக தெரிகிறது. அதற்கான காரணம் என்னவென்று பிக்பாஸ் கேட்டதற்கு பதில் அளித்த அவர், ‘இங்கு மனித மனதின் குரூரங்கள் வெளிப்படுகின்றன.

இதற்கு மேல ஒரு சதவீதம்கூட என்னால் இங்கு நீடிக்க முடியாது என்று ஆணித்தரமாக தெரிவித்ததாகவும், அதன் பிறகு பிக் பாஸ் எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் பவா இறங்கி வரவே இல்லை என்று தெரிகிறது.

நீங்கள் சொல்வது வரையிலும் இங்கேயே தான் இருப்பேன் என்று கன்ஃபெஷன் அறையிலேயே அமர்ந்திருந்ததாகவும், பின்னர் அவர் வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கதை சொல்லி என கருதப்படும் இவர், இந்த சீசனில் சொல்லிய ஒரு சில கதைகளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் மிகவும் கடினமான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் ஒரே வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி யதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. ஒரு சிலரோ அவரின் இந்த முடிவை விமர்சித்தும் வருகின்றனர். அவர் ஒரு நாள் முன்னதாக இந்த முடிவை எடுத்திருந்தால், நேற்று அனன்யா எலிமினேட் ஆகி இருக்க மாட்டார் என்றும், நல்ல வாய்ப்பை வீணடித்துவிட்டதாக கூறி வருகின்றனர். அனன்யாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வருமாறும் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முதற்கட்ட தகவல்படி பவா செல்லதுரை உடல்நலப்பிரச்சனைகள் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. போன சீசனில் இதே போல தன் மகனின் உடல்நிலையை காரணமாக சொல்லி இரண்டே வாரத்தில் ஜி.பி.முத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதைவிட ஒருபடி மேலாக ஒரே வாரத்தில் பவா செல்லதுரை வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %