1 0
Read Time:1 Minute, 27 Second

நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் இந்திய திருநாட்டின் முன்னால் குடியரசு தலைவர் பாரத ரத்னா Dr. APJ அப்துல்கலாம் அவர்களின் 92வது பிறந்த நாள் விழா மற்றும் பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கும் விழா நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அ.ரியாஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.

விழாவுக்கு பொருளாளர் இ.ராஜராஜன் முன்னிலை வகித்தார். அனைவரையும் இளைஞரணி செயலாளர் ஜா.சிராஜிதீன் வரவேற்றார். அப்துல் கலாம் அவர்களின் திருஉருவப்படத்துக்கு நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் R.ராமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் பிஜேபி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் காங்கிரஸ் வட்டார தலைவர் மனோகரன் பல்நோக்கு இயக்க நிர்வாகிகள் நேரு, ராஜா டாக்டர் நிவேதா, மற்றும் இயக்க நிர்வாகிகள் மாணவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிறைவாக துணை தலைவர் பா.சேவியர் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %