0 0
Read Time:1 Minute, 17 Second

கடலூர் முதுநகர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியது.

இந்த புயலுக்கு ஹாமுன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (புதன்கிழமை) வங்காளதேசம் நாட்டில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %