0 0
Read Time:2 Minute, 11 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.G. சீனிவாசன் அவர்களின் தங்கை திருமதி. ஹரிபிரியா சூரஜ் அவர்களின் மகன் மாதவன் பிறந்தநாளை முன்னிட்டு நமது சங்கத்தின் மூலமாக சிதம்பரம் மரியப்பா நகரில் உள்ள அன்பகம் முதியோர் இல்லத்தில் உள்ள 25 முதியவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சிதம்பரம் பைபாஸ் உள்ள CCWE Trust நடத்தும் மன வளர்ச்சி குன்றிய 50 குழந்தைகளுக்கு ஒரு நாளுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் நீரிழிவு நோயினால் பாதிக்கபட்ட ஒரு மாணவிக்கு ஒரு மாதத்திற்கு தேவையான இன்சுலின் மருந்து வழங்கப்பட்டது.மேலும் சிதம்பரத்தில் பொது இடங்களில் தெருவோரங்களில் வாழும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து குளிர்காலத்திற்கு பயன்பாட்டிற்கு தேவையான 20 போர்வைகள் வழங்கப்பட்டது.
மேற்கூறிய நான்கு திட்டத்திற்கு ரூபாய் 15000/- மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் முனைவர். வி. நடனசபாபதி தலைமையேற்றும் முன்னாள் துணை ஆளுநர் முனைவர்.M. தீபக்குமார் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலாளர் முனைவர்.G. அறுமுகம், மூத்த உறுப்பினர் P. பன்னாலால் ஜெயின், பொறியாளர் K. புகழேந்தி மற்றும் G. சீனிவாசன் அவர்களின் குடும்பத்தாரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %