0 0
Read Time:1 Minute, 11 Second

குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகளை இன்று (மார்ச் 07) வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13- ஆம் தேதி வரை துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டப் பதவிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது. இந்த எழுத்துத் தேர்வை 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் எழுதியிருந்தனர்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான வாய்மொழித் தேர்வு மார்ச் 26- ஆம் தேதி முதல் மார்ச் 28- ஆம் தேதி வரை நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %