1 0
Read Time:1 Minute, 39 Second

தரங்கம்பாடி, மார்ச்- 08:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையார் டி பி எம் எல் கல்லூரியில்
மகளிர் தின விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பல்வேறு போட்டிகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமை உரையாற்றினார், மகளிர் தின பேரூரை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி வசனகர்த்தா மற்றும் எழுத்தாளர் பத்மாவதிமகளிர் தின பேருரை ஆற்றினார், ரோட்டரி சங்க தலைவர். முனைவர் ஏ கே சந்துரு மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்லூரி துணை முதல்வர் முனைவர். பியூலா தங்கராஜ், ஐ கியூ ஏ சி ஒருங்கிணைப்பாளர் முனைவர். கிறிஸ்டி பொண்ணி, துறை தலைவர்கள் பேராசிரியர்கள் அலுவலக கண்காணிப்பாளர் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியை மகளிர் குழும ஒருங்கிணைப்பாளர். முனைவர்.கிரேஸ் ஞானதீபம் மற்றும் பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %