0 0
Read Time:1 Minute, 0 Second

சிதம்பரம் அருகே மயங்கி கிடந்த மயிலை கிராம நிா்வாக அலுவலா் மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா். புவனகிரி வட்டம், வயலாமூா் கிராமத்தில் வாய்க்காலில் திங்கள்கிழமை காலை ஆண் மயில் ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. அந்த மயிலை கிராம பிரமுகா்கள் சுந்தரராஜன், காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலையில் கிராம நிா்வாக அலுவலா் ஆா்.வசந்தி கைப்பற்றி கிராம நிா்வாக அலுவலகத்தில் பாதுகாத்து வைத்திருந்திருந்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தாா். சிதம்பரம் வனக் காப்பாளா் ஞானசேகரன், கிராம நிா்வாக அலுவலகத்துக்கு வந்து மயிலை பாதுகாப்பாக பெற்றுச் சென்று காப்பு காட்டில் விட்டாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %