0 0
Read Time:2 Minute, 53 Second

தமிழக அரசை கண்டித்து சிதம்பரத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி ஆர்பாட்டம் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்பு…

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தினை கட்டுப்படுத்த தவறிய திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிதம்பரம் மேலரத வீதியில் நடைப்பெற்ற மாபெரும் மனித சங்கிலி ஆர்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்பாட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மாரிமுத்து, மாவட்ட கழக பொருளாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் க.திருமாறன், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

ஆர்பாட்டத்தில் பேரூர் கழக செயலாளர்கள் தமிழரசன், முருகையன், பொதுக்குழு உறுப்பினர், கர்னாகரன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீரசாமி, நகர அம்மா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜெ.வசந்த், தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், ஆவின் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சந்திரசேகரன், மாணவரணி பொருளாளர் சங்கர், நகர மன்ற உறுப்பினர் சித்ரா, நகர கழக நிர்வாகிகள் வீரமணி, மார்கெட் நாகராஜ், மருதவாணன், கருப்பு ராஜா, சண்முகப்பிரியன், ஒன்றிய குழு துணை தலைவர் முடிவண்ணன், நிர்வாகிகள் ரெங்கசாமி, பு.தா.செங்குட்டுவன், இளஞ்செழியன், ஐ.டி.விங் மணிராஜ், டேங்க் சந்தோஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர கழக துணை செயலாளர் அரிசக்திவேல் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %