0 0
Read Time:1 Minute, 13 Second

அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் மார்ச் 28- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக ஏப்ரல் 29- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வை வரும் ஆகஸ்ட் 04- ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், நேர்முகத் தேர்வு தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %