0 0
Read Time:2 Minute, 14 Second

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.திருமாறன், மாவட்ட அவைத் தலைவர் எம்எஸ்என்.குமார், முன் னாள் மாவட்டச் செயலர் வி.கே.மாரிமுத்து, மாவட்ட இணைச் செயலர் ரங்கம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக வேட்பா ளர் மா.சந்திரகாசனை அறிமுகப்படுத்தி கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ உரையாற்றினார்.

கூட்டத்தில் அதிமுக மாவட்டப்பொருளாளர் தோப்பு சுந்தர், ஒன்றியச் செயலர்கள் அசோகன், சுந்தரமூர்த்தி, புவனகிரி துணைத் தலைவர் வாசுதேவன், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் தில்லை கோபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கர்ணா, மாவட்ட பாசறைச் செயலர் டேங்க் ஆர்.சண்முகம், நகரச் செயலர்கள் ஆர்.செந்தில்குமார், மாரிமுத்து, தமிழரசன், துணைச் செயலர் அரிசக்திவேல், பரங்கிப்பேட்டை கூட்டுறவு தலைவர் வசந்த் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்த ஜோதி சுதாகர் தலைமைக் கழக பேச்சாளர் தில்லை செல்வம் பன்னீர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர் தேமுதிக நிர்வாகிகள் விஜய உமாநாத், பாலு, பானு சந்தர், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் முகமது அலி, அப்துல்கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %