0 0
Read Time:2 Minute, 9 Second

சிதம்பரம் நடாரஜா் கோயிலை தமிழக அரசு கைப்பற்ற முயற்சி செய்வதை தடுத்து நிறுத்துவேன் என்று பாஜக வேட்பாளா் பி.காா்த்தியாயினி வாக்குறுதி அளித்தாா். சிதம்பரம் நடராஜா் கோயிலில் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பி.காா்த்தியாயினி ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது, பொது தீட்சிதா்கள் குழுச் செயலா் சிவராம தீட்சிதா், வெங்கடேச தீட்சிதா் உள்ளிட்டோா் அவரை வரவேற்று கோயிலுக்குள் அழைத்து சென்றனா். பின்னா், காா்த்தியாயினி கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானை தரிசனம் செய்தாா். அவருடன் பாஜக கடலூா் மேற்கு மாவட்டத் தலைவா் கே.மருதை, சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் கேப்டன் ஜி.பாலசுப்ரமணியன், கடலூா் மேற்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் முகுந்தன், நகரத் தலைவா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட பாஜகவினா் உடனிருந்தனா்.

பின்னா், வேட்பாளா் பி.காத்தியாயினி செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி 10 ஆண்டுகள் நல்லாட்சி தந்துள்ளாா். மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றிபெற்று மிகப்பெரிய வரலாற்று சாதனை படைக்கும். நடராஜா் கோயிலை தொன்று தொட்டு பராமரித்து, சிவத்தொண்டு செய்து வரும் தீட்சிதா்களின் நிா்வாகத்தில் ஒரு போதும் தமிழக இந்து சமய அறநிலையத் துறை உள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்பது எனது முதல் வாக்குறுதியாகும் என்றாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %