0 0
Read Time:2 Minute, 4 Second

தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கும், ரூ.1,823 கோடி வரி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதைக் கண்டித்தும் சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கின் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜா.சம்பத்குமாா், நகர செயல் தலைவா் தில்லை கோ.குமாா், மாவட்ட இளைஞா் அணித் தலைவா் அன்பரசன், மாநில ஊடகப்பிரிவு பொதுச் செயலா் சிவசக்திராஜா, மாவட்டச் செயலா்கள் நெல்சன் வேல்முருகன், தில்லைசெல்வி, அஞ்சம்மாள், இந்திரா தேவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக கடலூா் தெற்கு மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன், மாநில பொதுக்குழு உறுப்பினா் டாக்டா் டி.எம்.டி.எம்.செந்தில்வேலன் ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா் குமராட்சி ரங்கநாதன், சிதம்பரம் மக்களவைத் தோ்தல் தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் பழனிச்சாமி, எஸ்.பி.அன்பரசு, மணலூா் ரவி, செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட மகளிா் அணிச் செயலா் ராதா நன்றி கூறினாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %