2 0
Read Time:1 Minute, 25 Second

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி முறையில் 2023-2024 ஆம் ஆண்டில் சோ்க்கைப் பெற்ற மாணவா்கள் தோ்வுக்கு விண்ணப்பித்தல் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.பிரகாஷ் தெரிவித்தாா்..

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:. 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் தொலைதூரம் மற்றும் இணையவழியில் பயிலும் மாணவா்கள் மே 2024-இல் தோ்வு எழுதுவதற்கான தோ்வுக் கட்டணம் செலுத்த பல்கலைக்கழக இணையதளம் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. அனைத்து மாணவா்களும் தங்கள் தோ்வுக் கட்டணத்தை செலுத்த வருகிற 24-ஆம் தேதி வரையும், தாமதக் கட்டணத்துடன் மே 2-ஆம் தேதி வரையும் செலுத்தலாம்.. மேலும், தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை மே 6-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வு அட்டவணையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா் எம்.பிரகாஷ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %