Read Time:1 Minute, 6 Second
குமராட்சி ஊராட்சி மன்ற தலைவரும் வர்த்தக சங்க தலைவர் மான கேஆர்ஜி தமிழ்வாணன் தாயார் சின்னமணி அம்மையார் அவர்கள் கடந்த மே 27ம் தேதி இயற்கை எய்தினார்.
நேற்று அவரது திருவுருவப்படத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினுடைய கடலூர் மாவட்ட மண்டல தலைவர் சண்முகம் படத்தை திறந்து வைத்து மலர் தூவி புகழ்அஞ்சலி செலுத்தினார்.
உடன் மாவட்ட செயலாளர் வீரப்பன் குமராட்சி வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன் கேஆர்ஜி மணிக்கண்ணன் கேஆர்ஜி தமிழ்செல்வம் அருண் சத்தியமூர்த்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள் உறவினர்கள் நண்பர்கள் கிராம பொதுமக்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி