0 0
Read Time:1 Minute, 54 Second

குமராட்சி வர்த்தக சங்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் வர்த்தக சங்க கௌரவத் தலைவர் சக்கரவர்த்தி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இன்று தனியார் திருமண மண்டபத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் இளையராஜா அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

முன்னதாக வர்த்தக சங்கத்தினர் மண்டபத்தின் முகப்பில் வைத்திருந்த சக்கரவர்த்தி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர் உடன் வழக்கறிஞர் ராமலிங்கம் பேராசிரியர் இளஞ்செழியன் இளங்கோவன் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை வர்த்தக சங்கத் தலைவரும் ஊராட்சி மன்ற தலைவருமான கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமை வகித்தார் வரவேற்புரை செயலாளர் மணிவண்ணன் ஒருங்கிணைப்பாளர் அப்துல்பாசித் துணைத் தலைவர் பார்த்தசாரதி துரைசிங்கம் அப்துல்ரவுப் குமரவடிவு மணிகண்டன் பாலமுருகன் பிரதீப் குட்டிமணி உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர் முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 55 நபர்களை கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %