0 0
Read Time:1 Minute, 48 Second

18வது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நமது நாட்டின் 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. இந்தியாவிலுள்ள 96 கோடி மொத்த வாக்காளர்களில் 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றியுள்ளனர். இதில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணியிலிருந்து முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம் உடனடியாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். காலை 8 மணிக்கே வாக்கு எண்ணும் பணி தொடங்குவதால், காலை 11 மணியளவில் இருந்தே முன்னணி நிலவரங்கள் வெளிவரத் தொடங்கிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %