0 0
Read Time:1 Minute, 15 Second

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பேர்லின் வில்லியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்றத் தலைவர் க.பழனி கலந்து கொண்டு பள்ளியில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் தங்க.அன்பரசு, உதவி தலைமை ஆசிரியர்கள் முருகவேல், சுரேஷ், உடற்கல்வி இயக்குனர் முருகையன், என்சிசி ஆசிரியர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %