0 0
Read Time:1 Minute, 27 Second

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் உலக யோகா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அருகே உள்ள சி.வக்காரமாரி வீனஸ் சிபிஎஸ்இ பள்ளி யில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகி வீனஸ் எஸ்.குமார் தொடங்கி வைத்து, பள்ளி மாண வர்களிடம் யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். முன்னதாக பள்ளி முதல்வர் ராதிகா வரவேற்றார். இதேபோல், சிதம்ப ரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் காலை வழிபாட் டுக் கூட்டத்தில் யோகக் கலையின் சிறப்புகளையும், முக்கியத்துவத் தையும் உணர்த்தும் வகையில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வை ஏற்ப டுத்தினர். தொடர்ந்து, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் கள் பள்ளி முதல்வர் சத்தியவாகீஸ்வரன் முன்னிலையில் யோகாசனங் களை செய்து காண்பித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %