0 0
Read Time:1 Minute, 9 Second

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று மதியம் நடைபெற வேண்டிய சுற்றுச்சூழல் அறிவியலுக்கான செமஸ்டர் தேர்வு 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை உடனடியாக திறக்காமல் அப்படியே திருப்பி அனுப்ப உத்தரவு.

மதியம் நடைபெற வேண்டிய தேர்வுக்கான வினாத்தாள் ஒரு கல்லூரியில் காலையிலேயே திறக்கப்பட்டதாக தகவல் அதனால் வினாத்தாள் கசிந்து விடும் அபாயம் இருந்ததால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இன்று நடைபெற இருந்த பி.இ. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %