0 0
Read Time:2 Minute, 20 Second

தமிழ்நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

“தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான துணைத்தோ்வு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளின் முடிவுகள் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழாக வெளியிடப்படவுள்ளன.

அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு ஜூலை 26-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு ஜூலை 30-ஆம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூலை 31-ஆம் தேதியும் துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் தங்கள் முடிவுகளை மதிப்பெண் சான்றிதழாக பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மாவட்ட தோ்வுத்துறை உதவி அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவுசெய்ய வேண்டும். அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு ஜூலை 29, 30-ஆம் தேதிகளிலும், பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 1, 2-ஆம் தேதிகளிலும் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விடைத்தாள் நகல் பெற்ற மாணவா்கள் மட்டுமே பின்பு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %