0 0
Read Time:1 Minute, 24 Second

குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தனது சொந்த செலவில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செல்போன் மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கினார்.

குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த கவிப்பிரியாவுக்கு ரூபாய் 13 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த அபிதாவுக்கு ரூபாய் 6500 மதிப்புள்ள சைக்கிள் ஆகிய பரிசினை குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தனது சொந்த செலவில் மாணவிகளுக்கு வழங்கினார்.

உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமுருகன் துணைத் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் ஆசிரியர் கலைவாணன் பாலசுப்பிரமணியன் லாவண்யா மாணவிகளின் பெற்றோர் வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன் ஆகிய அனைவரும் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %