0 0
Read Time:1 Minute, 58 Second

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடதமிழகத்திலும் தென் தமிழகத்திலும் உள்ள கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. தொடர்ந்து, தென் மேற்கு பருவமழை மற்றும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அதன்படி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %