0 0
Read Time:2 Minute, 25 Second

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய பிறந்தநாள் கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக சிதம்பரம் நகரத்தில் நடைபெற்றது. சிதம்பரம் நகர கழக செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சிதம்பரம் மேல வீதியில் நடைபெற்றது.

மாவட்ட கழக அவை தலைவர் பாலு மாவட்ட கழக துணை செயலாளர் பானுசந்தர் தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் கே ஆர் விஜயஉமாநாத் அவர்கள் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட விஜயகாந்தின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே போல குமராட்சி ஒன்றியம், அண்ணாமலை நகர் பகுதியிலும் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக துணை செயலாளர் தெய்வா, பொதுக்குழு உறுப்பினர் சந்தானகிருஷ்ணன், மணிகண்டன் சீராள தேவன், ராஜதுரை , துரை முருகவேல், சந்திரகுமார், சபரி ராஜன் ,அறிவழகன், ராமர்
மற்றும் மணிகண்டன் மகேஷ், சம்பத், ராஜா ,ஸ்ரீதர், சீனு, ராஜேஷ், வேலு, சத்தியமூர்த்தி, தில்லை ராஜன், மாரியப்பன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக காலை மன வளர்ச்சி குன்றிய பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு காலை உணவு மாவட்ட மகளிர் அணி விஜயலட்சுமி சார்பாக வழங்கப்பட்டது.சிதம்பரம் பேரூந்து நிலையத்திலும் கேப்டன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பேருந்து நிலைய நிகழ்ச்சியை பொதுக்குழு உறுப்பினர் சந்தான கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %