0 0
Read Time:2 Minute, 32 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் கிள்ளை பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம்
கிள்ளை பேரூர் கழக அவைத் தலைவர் எஸ் குட்டியாண்டிசாமி தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும்,பேரூர் கழக செயலாளருமான வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பேரூர் கழக நிர்வாகிகள். மாவட்ட கழக நிர்வாகிகள். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள். மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கடலூர் கிழக்கு மாவட்டம் முழுவதும் செயல்வீரர் கூட்டம் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கிளையின் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி. அனைத்து கழக கொடி கம்பங்களையும் புதுப்பிப்பது என்றும். கொடிக்கம்பம் இல்லாத பகுதிகளில் இரு வண்ண கொடிகள் உயர்த்துவது என்றும் . இல்லம் தோறும் இளைஞர் அணி என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் பேரூராட்சி முழுவதும் இளைஞர்களை கழகத்தில் இணைப்பது என்றும். இல்லம் தோறும் மகளிர் அணி என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் அனைத்து வார்டுகளிலும் அதிக அளவில் பெண்களை மகளிர் அணியில் உறுப்பினராக சேர்ப்பது என்றும். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் ஒன்றிய பிரதிநிதி இளஞ்சேரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார். கூட்டத்தில் பேச்சாளர் செழியன் மற்றும் அனைத்து வார்டு செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக கிள்ளையில் உள்ள தலைவர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது !

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %