0 0
Read Time:1 Minute, 24 Second

யிலாடுதுறை அரசு மருத்துவனையில் இறந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை அரசு மருத்துவர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடந்த 10ஆம் தேதி கொரோனா சிகிச்சையில் இருந்த சேந்தக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் கழிவறைக்கு சென்றபோது இறந்துவிட்ட நிலையில், அவரை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டப்பட்டதாக புகார் எழுந்தது.இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனைக்கு வந்த ராஜேந்திரனின் உறவினரான ரவி என்பவர், ராஜேந்திரனின் 2 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட உடைமைகளை தருமாறு மருத்துவர் சுகுந்தனிடன் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.இதனிடையே ரவி தாக்கியதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுகுந்தன், அளித்த புகாரின் பேரில் ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %