0 0
Read Time:1 Minute, 17 Second

விருத்தாசலம் கிளை சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகள் 4 பேரையும் சிறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விருத்தாசலம் கிளை சிறையில் 4 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் சிறை கைதிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %