0 0
Read Time:1 Minute, 17 Second

கடலூா் மாவட்ட கரோனா சிறப்பு மையமாக செயல்படும் சிதம்பரம் அண்ணாமலை நகா் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வாா்டுக்குள் செல்ல பாா்வையாளா்களுக்கு அனுமதி கிடையாது என உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தெரிவித்தாா். நானூறுக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வரும் இந்த வாா்டில் உள்ள நோயாளிகளைப் பாா்க்க பாா்வையாளா்கள், உறவினா்கள் வந்து செல்வதால் நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, கரோனா வாா்டு வெளிப்புறக்கதவில் பாதுகாப்பு நலன் கருதி பாா்வையாளா்களுக்கு அனுமதி கிடையாது என எழுதி வைக்கப்பட்டுள்ளது.நோயாளிகளுக்கு அவசரமாக தேவைப்படும் மருந்துகள் போன்றவற்றை அங்குள்ள மருத்துவ உதவியாளா்களிடம் அளித்தால், அவை குறிப்பிட்ட நோயாளிகளிடம் கொண்டு சோ்க்கப்படும் என உதவி ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %