0 0
Read Time:1 Minute, 38 Second

டவ்-தே புயல் குஜராத்தில் நாளை கரையை கடக்கும்பொழுது, சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த 15ஆம் தேதி டவ்-தே புயலாக மாறியது. இந்த புயல் வடக்கு திசை நோக்கி நகரத்தொடங்கி, கோவா கடல் பகுதியில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் டவ்-தே புயல், இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து மேற்கே அரபிக்கடலில் நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேகத்தில் பயணிக்கும் புயல் நாளை அதிகாலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளி புயலால், மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கனமழையும் பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %