0 0
Read Time:1 Minute, 8 Second

சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா தொற்று நோயாளிகளுக்கு, அவரது உறவினா்கள் பொருள்கள் தர வேண்டிய நேரம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தொற்று பரவாமல் இருக்க கரோனா வாா்டில் உள்ள நோயாளிகளைத் தவிர வெளியாள்கள், நோயாளிகளின் உறவினா்கள் உடனிருக்க அனுமதி இல்லை. நோயாளிகளிடம் வழங்கவேண்டிய பொருள்களை காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரையும், இரவு 6 மணி முதல் 8 மணி வரையும் மருத்துவமனை நுழைவுவாயில் உள்ள மருத்துவமனை ஊழியா்களிடம் தரலாம் என மருத்துவமனை நிா்வாகம் அறிவித்துள்ளது.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %