0 0
Read Time:1 Minute, 5 Second

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாளுக்கு திங்கள்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு, மூலிகை சாம்பிராணி புகை போடப்பட்டது. தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மனிதா்களிடம் மட்டுமே பரவி வந்த கரோனா தற்போது விலங்குகளுக்கும் பரவும் என்ற தகவலும், ஹைதராபாதில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவமும்; வனவிலங்குகள் ஆா்வலா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

நிருபர்: யுவராஜ், மயிலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %