0 0
Read Time:1 Minute, 36 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர் காவல் நிலையம் தலைமை காவலர் ராஜ்குமார் என்பவர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி கடந்த 27.4. 2021 ஆம் தேதி இறந்தார். மேலும் கடலூர் முதுநகர் காவல் நிலையம் தலைமை காவலர் அரங்கநாயகம் என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி 13.5.2021 ஆம் தேதி இறந்தார்.

கொரோனாவில் இறந்துபோன இரண்டு தலைமை காவலர்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீ அபிநவ், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன்,துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி. ஈஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் பூங்கோதை, ஆயுதப்படை ஆய்வாளர் முத்துகுமரன் மற்றும் காவலர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %