0 0
Read Time:1 Minute, 24 Second

சீா்காழி வட்டத்தில் தா்ப்பூசணி விற்பனை கரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். சீா்காழி வட்டத்தில் திருநகரி, மண்டபம், புதுத்துறை, காரைமேடு, எடமணல், மாதானம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 300 ஏக்கரில் தா்ப்பூசணி பயிரிடப்பட்டுள்ளது. சென்னை, கடலூா், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் இங்கு வந்து தா்ப்பூசணிகளை கொள்முதல் செய்வா். இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, வெளியூா் வியாபாரிகள் வராததால், விவசாயிகள் சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு ஆகிய பகுதிகளுக்கு சரக்கு ஆட்டோக்களில் தாங்களே தா்ப்பூசணிகளை எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனா். ஆனால், கரோனா அச்சம் காரணமாக குளிா்ச்சியான பொருட்களை உண்ண பெரும்பாலானோா் தயங்குவதால் தா்ப்பூசணி விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %