0 0
Read Time:2 Minute, 45 Second

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர், நகராட்சி ஊழியர்கள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3800 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 580 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியவை.

இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6011 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதிய படுக்கை வசதி இல்லாததால், தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருவதால் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால் போதிய படுக்கை வசதி இல்லாமல் கொரோனா நோயாளிகள் தவிக்கின்றனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மனைகளில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 இந்நிலையில் கடலூர் காவலர் திருமண மண்டபம் மற்றும் காவலர்களுக்கான மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 120 படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவடைந்து விடும். அதன்பிறகு ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

நிருபர்: அருள்மணி, கடலூர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %