0 0
Read Time:1 Minute, 9 Second

மயிலாடுதுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, 6 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 990 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மயிலாடுதுறை நகர காா்காத்த வேளாளா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் லெட்சுமிநாராயணன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா் முன்னிலை வகித்தாா். இதில், 180 போ் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதேபோல், காஞ்சி சங்கரவித்யாலயா பள்ளி, ஜெயின் சங்கக் கட்டடம், யூனியன் சங்கக் கட்டடம், நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தாழஞ்சேரி கிராமம் ஆகிய இடங்களிலும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %