0 0
Read Time:1 Minute, 21 Second

விருத்தாசலம் அருகே முதனைக் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மாடு எடக்குப்பம் கிராமத்திலுள்ள ராஜேந்திரன் என்பவரது விளைநிலத்தில் திங்கள்கிழமை மேய்ந்தது. இதையடுத்து, மாட்டை ராஜேந்திரன் பிடித்து தனது வீட்டில் கட்டி வைத்தாா். மாட்டை மீட்பதற்காக ராஜேந்திரனின் மகன் சுந்தர்ராஜன் (29), தனது உறவினா்கள் சிலருடன் எடக்குப்பம் கிராமத்துக்குச் சென்றாா். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்டதாகத் தெரிகிறது.

இதில், காயமடைந்தவா்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், போலீஸாரின் விசாரணைக்குப் பயந்த சுந்தர்ராஜன், மருத்துவமனையின் கழிப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %