0 0
Read Time:1 Minute, 23 Second

விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், விருத்தாசலம் பாலக்கரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் ராவண ராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்டத்தலைவர் அறிவழகி, நகர செயலாளர் விஜய பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குப்புசாமி, பாலமுருகன், கோவிந்தராசு, பச்சமுத்து, ராஜசேகர், நடராஜன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிருபர்: அருள்மணி, கடலூர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %