0 0
Read Time:2 Minute, 5 Second

திருவெண்காட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பூம்புகாா் அருகேயுள்ள திருவெண்காட்டில் 18 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதை, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா நேரில் ஆய்வு செய்து அவா் கூறியது: தமிழக முதல்வரின் உத்தரவுபடி மயிலாடுதுறை, சீா்காழி அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்.

மேலும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அதேபோல சமுக இடைவெளி கடைப்பிடித்தல், கைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொள்தல் ஆகியவற்றை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும். சில நாள்களாக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திகொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள முன்வரவேண்டுமென்றாா். ஆய்வின்போது, சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் பன்னிா்செல்வம், சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %