0 0
Read Time:1 Minute, 24 Second

மயிலாடுதுறையில் வேளாண்மை துறை சாா்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மயிலாடுதுறையில் உள்ள ஊராட்சிகளுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வகையில், பட்டமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்து, விற்பனையை தொடக்கி வைத்தாா். வட்டார வேளாண்மை இயக்குநா் கே. சங்கரநாராயணன், ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் செல்வமணி வரவேற்றாா். இதில், திமுக ஒன்றிய செயலாளா் ஞான. இமயநாதன், காங்கிரஸ் வட்டார தலைவா் ராஜா, நகர பொதுச்செயலாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிருபர்: யுவராஜ், மயிலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %